Thursday, September 15, 2011

எதிரிகளை வெல்ல ஒரு எளிய மந்திரம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய
'திரு ஆவடுதுறை' பதிகத்தில் இடம்பெறும் 
வரும் இரு தேவாரப் பாடல்களைத்
தொடர்ந்து பாராயணம்செய்து,
சிவபெருமானை மனதார வேண்டி 
நின்றால் சத்ரு பயம் நாசமாகும்.

*வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்! தானவர் தலைவர் போலும்!
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும் 
அக்கரை யார்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.        

*விடைதரு கொடியர் போலும்! வெண் புரி நூலர் போலும்!
படைதரு மழுவர் போலும்! பாய்புலித் தோலர் போலும்!
உடைதரு கீளர் போலும்! உலகமும் ஆவார் போலும்!

Monday, July 18, 2011

om hreem gam hreem

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம்
மஹா கணபதயே ஸ்வாஹா
benefits of this mantra explained by

Friday, May 27, 2011

ஸ்ரீ நரசிம்மர் ஸ்துதி


ஸ்ரீ நரசிம்மர் ஸ்துதி

ஸ்ரீமத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்த்ர போகமணி ராஜித புண்ய மூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத 
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்.





Wednesday, May 18, 2011

ஸ்ரீ ரங்கநாதர் ஸ்துதி


ஸ்ரீ ரங்கநாதர்
ஸப்தப்ராகார மத்யே ஸரஸிஜ முகுலோத்பாஸமாநே விமாநே
காவேரீ மத்யதேசே பணிபதிசயநே சேஷபர்யங்க பாகே
நித்ராமுத்ராபிராமம் கடிநிகடசிர: பார்ச்வ விந்யஸ்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம்பஜேஹம்.

ஸ்ரீ நிவாஸர் ஸ்துதி


ஸ்ரீ நிவாஸர் ஸ்துதி
கல்யாணாத்புத காத்ராய காமிதார்த்த ப்ரதாயிநே
ஸ்ரீமத் வேங்கடநாதாய ஸ்ரீநிவாஸாய தே நம:
ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்திநாம்
ஸ்ரீ வேங்கட நிவாஸாய ஸ்ரீ நிவாஸாய மங்களம்.

Saturday, May 14, 2011

சுப சகுனங்கள்: suba sakunankal

சுப சகுனங்கள்

கன்னி, பசு, ரத்தினம்,மலர், தயிர், யானை, குதிரை, பல அந்தணர்கள், கொடி, எரியும் அக்னி, பூர்ண கும்பம், காளை, தாமரை, சந்தனம், தனியங்கள், பிணம், வேசி, வெள்ளைமாலை, அக்ஷதை, எள்ளு, சலவைத்துணி, குழந்தையுடன் உள்ள பெண், கன்றுடன் கூடிய பசு, சங்கு, வாத்திய ஒலி, மாமிசத்துண்டு, நெய், பால் இவை எதிரில் வந்தால் உத்தமம்.
போ, வாழ்க, நன்றாக இரு, செவ்வாய், எழு, புறப்படு முதலிய ஒலி வருமானால் நல்லது.

அசுப சகுனங்கள்
மோர், எண்ணெய் தேய்த்துக் கொண்டவன், தலைமுடி விரித்துப் போட்டிருப்பவள், சடைமுடியுடையவன், ஊர்சுற்றுபவன், குயவர், சிவந்த மலர், ஈரத்துணி, உப்பு, பன்றி, வலதுகால் தடுக்குதல், அழுகை, பாம்பு, முயல் இவை எதிரில் வரலாகாது.
வா, நில், எங்கே போகிறாய் என்ற ஒலி ஆகாது.

Thursday, May 5, 2011

ஸ்ரீ ராமஜெயம்: sri raamajeyam

ஸ்ரீ ராமஜெயம்


"தீர்த்த யாத்திரை, பாப விமோசனம்:
கோபுர தரிசனம், கோடி புண்ணியம்" என்பார்கள். ஆண்டவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிலும் தனித்து நிற்பதும், சிறப்பு வாய்ந்ததும் மனிதப் பிறவி ஒன்று தான். மனிதர்களாகப் பிறவி எடுத்த நாம், நாம் எடுத்த பிறவி நன்மை அடைய பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று ஆண்டவனை தரிசித்து புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்கிறோம். இதற்கும் மேலாக நாம் இருந்த இடத்திலேயே நாம் நமக்கு வேண்டியதை மனதில் எண்ணி ஸ்ரீ ராமஜெயம் எனும் மந்திரத்தை தொடர்ந்து எழுதுவதினால் நாம் நினைத்த காரியம் உறுதியாக கைகூடும் என்பதில் சற்றும் ஐயமில்லை. மேலும் இதனால் ஏற்படும் பலங்களும், புண்ணியங்களூம் சொல்லிலும், கணக்கிலும் அடங்கா. எழுதும் பொழுது மௌனமாகவும், கவனத்துடன் மனதை ஒரு நிலைப்படுத்தி எழுதுவது மிக மிக அவசியமாகும். ராம நாமம் எங்கு ஒலித்தாலும் அங்கெல்லாம் நம் கண்களுக்குப் புலப்படாமல், தமது கண்களில் கண்ணீர் மல்கி ஆஞ்சனேயர் குடி கொண்டிருப்பாராம். ஆதலால் நாம் ஆஞ்சனேயரின் அன்புக்கும் பக்திக்கும் ஆளாகின்றோம். இதனால் நாம் சிற்றின்பத்திலிருந்து விலகி பக்தியை அடைகின்றோம். மனதில் தைரியத்தை அளித்து நம்மைக் காக்கின்றார் ஆஞ்சனேயர்.

(((((((((( ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ))))))))))