Tuesday, August 23, 2016

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு













பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 

பலகோடி நூறாயிரம் 
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் 
சேவடி செவ்வி திருக்காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி 
ஆயிரம் பல்லாண்டு,
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற 
மங்கையும் பல்லாண்டு,
வடிவார் சோதி வலத்துறையும் 
சுடராழியும் பல்லாண்டு,
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே.   

Monday, August 22, 2016

காமாட்சி குங்கும மகிமை




காமாட்சி குங்கும மகிமை
குங்கும மாவது குறைகளைத் தீர்ப்பது
குங்கும மாவது குடியினைக் காப்பது
குங்கும மாவது கணம தளிப்பது
குங்கும மாவது கொல்வினை தீர்ப்பது.

விதிதனை வெல்வது விமலையின் குங்குமம்
நிதிதனை ஈவது நிமலையின் குங்குமம்
பதிதனை காப்பது பதிவிரதை குங்குமம்
கதிதனை யாள்வதும் குங்கும மாமே.

தஞ்சமென்றோரைத் தடுத்தாண்டு கொள்வதும்
பஞ்ச மாபாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
அஞ்சின பேருக் கபய மளிப்பதும்
காஞ்சி காமாட்சியின் குங்கும மாமே

நற்பத மீவது நாரணி குங்குமம்
பொற்பினை ஈவது பூரணி குங்குமம்
சிற்பரமாவது சிவகாமி குங்குமம்
கற்பினைக் காப்பதும் குங்கும மாமே.

செஞ்சுடர் போல்வது சீரான குங்குமம்
கொஞ்சு மழலைக் கொடுப்பது குங்குமம்
அஞ்சு புலங்க ளடக்கி யருள்வதும்
காஞ்சி காமாட்சியின் குங்கும மாமே.

நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறி வீவதும்
பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
தாயினை அர்சித்த குங்கும மாமே.

சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
சித்தி தருவதும் குங்கும மாமே.

நெஞ்சிற் கவலைகள் நீக்கி யருள்வதும்
செஞ்சொற் கவிபாடுஞ் சீரினை யீவதும்
வஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும்
காஞ்சி காமாட்சியின் குங்கும மாமே.

சிவசிவ என்றுத் திருநீறணிந்த பின்
சிவகாமி யேயெனச் சிந்தித்தணிவதும்
தவமான மேலோருந்தரித்துக் களிப்பதும்
பவவினை தீர்ப்பதும் குங்கும மாமே.

எவையெவை கருதிடில் அவையவையீவதும்
நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்குக்
குவிநிதி யீவதும் குங்கும மாமே.

அஷ்ட லட்சுமி அருள தளிப்பதும்
இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
கஷ்டந் தவிர்ப்பதும் காத்தெனை யாள்வதும்
சிஷ்டராய்ச் செய்வதும் குங்கும மாமே.

குஷ்டம் முதலான மாரோகந் தீர்ப்பதும்
நஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும்
எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினைக்
கிட்டவே செய்வதும் குங்கும மாமே.

பட்டகாலிலே படுமெனக் கஷ்டங்கள்
விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
பட்டான பார்வதி பாதம் பணிந்தே
இட்டார் இடர் தவிர் குங்கும மாமே.

சித்தந்தனைச் சுத்தி செய்வதற்கெளியதோர்
எத்துந் தெரியாத ஏமாந்த மாந்தரே
நித்தம் தொழுதன்னை குங்குமந்தன்னை
நித்தம் தரித்துமே வீட்டை வீரே.

மிஞ்சும் அழகுடன் குங்கும ஆடைகொள்
செஞ்சுடராகுமோர் காஞ்சி காமாட்சியின்
கஞ்ச மலர் முகந்தன்னிற் றிகழ்வதும்
பஞ்ச நிதி தரும் குங்கும மாமே.

Monday, February 15, 2016

பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்.





பாம்பன் ஸ்ரீ குமரகுருதாச சுவாமிகள் அருளிய 
             குமாரஸ்தவம்.

ஓம் ஷண்முக பதயே நமோ நம:
ஓம் ஷண்மத பதயே நமோ நம:
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:
ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம:
ஓம் ஷட்கோண பதயே நமோ நம:
ஓம் ஷட்கோச பதயே நமோ நம:

ஓம் நவநிதி பதயே நமோ நம:
ஓம் சுபநிதி பதயே நமோ நம:
ஓம் நரபதி பதயே நமோ நம:
ஓம் சுரபதி பதயே நமோ நம:
ஓம் நடச்சிவ பதயே நமோ நம:
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:

ஓம் கவிராஜ பதயே நமோ நம:
ஓம் தபராஜ பதயே நமோ நம:
ஓம் இகபர பதயே நமோ நம:
ஓம் புகழ்முநி  பதயே நமோ நம:
ஓம் ஜயஜய பதயே நமோ நம:
ஓம் நயநய பதயே நமோ நம:

ஓம் மஞ்சுள பதயே நமோ நம:
ஓம் குஞ்சரி பதயே நமோ நம:
ஓம் வல்லீ பதயே நமோ நம:
ஓம் மல்ல பதயே நமோ நம:
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:

ஓம் ஷஷ்டி பதயே நமோ நம:
ஓம் அபேத பதயே நமோ நம:
ஓம் சுபோத பதயே நமோ நம:
ஓம் (வ்)வியூஹ பதயே நமோ நம:
ஓம் மயூர பதயே நமோ நம:
ஓம் பூத பதயே நமோ நம:

ஓம் வேத பதயே நமோ நம:
ஓம் புராண பதயே நமோ நம:
ஓம் ப்ராண பதயே நமோ நம:
ஓம் பக்த பதயே நமோ நம:
ஓம் முக்த பதயே நமோ நம:
ஓம் அகார பதயே நமோ நம:

ஓம் உகார பதயே நமோ நம:
ஓம் மகார பதயே நமோ நம:
ஓம் விகாச பதயே நமோ நம:
ஓம் ஆதி பதயே நமோ நம:
ஓம் பூதி பதயே நமோ நம:
ஓம் அமார பதயே நமோ நம:
ஓம் குமார பதயே நமோ நம:

குமாரஸ்தவம் முற்றிற்று.
  

Thursday, January 28, 2016

சிவபெருமான் 108 போற்றி













சிவபெருமான் 108 போற்றி 
ஓம் அப்பா போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் அரசே போற்றி
ஓம் அமுதே போற்றி
ஓம் அழகே போற்றி
ஓம் அத்தா போற்றி
ஓம் அற்புதா போற்றி
ஓம் அறிவா போற்றி
ஓம் அம்பாலா போற்றி
ஓம் அறியோய் போற்றி

ஓம் அருந்தவா போற்றி
ஓம் அணுவே போற்றி
ஓம் அண்டா போற்றி
ஓம் ஆதியே போற்றி  
ஓம் அறங்கா போற்றி
ஓம் ஆரமுதே போற்றி
ஓம் ஆரணா போற்றி
ஓம் ஆண்டவா போற்றி
ஓம் ஆலவாய போற்றி
ஓம் ஆருரா போற்றி

ஓம் இறைவா போற்றி
ஓம் இடபா போற்றி
ஓம் இன்பா போற்றி
ஓம் ஈசா போற்றி
ஓம் உடையாய் போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் உயிரே போற்றி
ஓம் ஊழியே போற்றி
ஓம் எண்ணே போற்றி
ஓம் எழுத்தே போற்றி

ஓம் எண்குணா போற்றி
ஓம் எழிலா போற்றி
ஓம் எளியா போற்றி
ஓம் ஏகா போற்றி
ஓம் ஏழிசையே போற்றி
ஓம் ஏறூர்ந்தாய் போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் ஒருவா போற்றி
ஓம் ஒப்பிலா போற்றி
ஓம் ஒளியே போற்றி

ஓம் ஒலியே போற்றி
ஓம் ஓங்காரா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் கதிரே போற்றி
ஓம் கதியே போற்றி
ஓம் கனியே போற்றி
ஓம் கலையே போற்றி
ஓம் காருண்யா போற்றி
ஓம் குறியே போற்றி
ஓம் குருவே போற்றி

ஓம் குணமே போற்றி
ஓம் கூத்தா போற்றி
ஓம் சடையா போற்றி
ஓம் சங்கரா போற்றி
ஓம் சதுரா போற்றி
ஓம் சாதாசிவ போற்றி
ஓம் சிவமே போற்றி
ஓம் சிறந்தாய் போற்றி
ஓம் சித்தா போற்றி
ஓம் சீரா போற்றி

ஓம் சுடரே போற்றி
ஓம் சுந்தரா போற்றி
ஓம் செல்வா போற்றி
ஓம் செங்கனா போற்றி
ஓம் செம்பொன்னா போற்றி
ஓம் சொல்லே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞானமே போற்றி
ஓம் தமிழே போற்றி
ஓம் தத்துவா போற்றி

ஓம் தலைவா போற்றி
ஓம் தந்தையே போற்றி
ஓம் தாயுமானவா போற்றி
ஓம் தாண்டவா போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திசையே போற்றி
ஓம் திரிசூலா போற்றி
ஓம் துணையே போற்றி
ஓம் தெளிவே போற்றி
ஓம் தேவதேவா போற்றி

ஓம் தோழா போற்றி
ஓம் நமசிவாய போற்றி
ஓம் நண்பா போற்றி
ஓம் நஞ்சுண்டா போற்றி
ஓம் நான்மறையா போற்றி
ஓம் நிறைவே போற்றி
ஓம் நினைவே போற்றி
ஓம் நீலகண்டா போற்றி
ஓம் நெறியே போற்றி
ஓம் பண்ணே போற்றி

ஓம் பித்தா போற்றி
ஓம் புனிதா போற்றி
ஓம் புராணா போற்றி
ஓம் பெரியோய் போற்றி
ஓம் பொருளே போற்றி
ஓம் பொங்கரவா போற்றி
ஓம் மணியே போற்றி
ஓம் மதிசூடியே போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் மலையே போற்றி

ஓம் மஞ்சா போற்றி
ஓம் மணாளா போற்றி
ஓம் மெய்யே போற்றி
ஓம் முகிலே போற்றி
ஓம் முக்தா போற்றி
ஓம் முதல்வா போற்றி
ஓம் வாழ்வே போற்றி
ஓம் வைப்பே போற்றி

Thursday, August 13, 2015

ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்



ஸ்ரீ ஹரி:
ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளைகமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான் ஓர்
காளைபுகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

இந்திரனுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடியுடித்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

நால்திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத் தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண்கட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

கதிரொளி தீபம் கலசமுடனேந்தி
சதிரிள மங்கையர்தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலைதொட்டு எங்கும்
அதிரப்புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,
முத்து உடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்,
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

வாய்நல்லார் நல்லமறையோதி மந்திரத்தால்
பாய்சிலை நாணல்படுத்துப் பரிதி வைத்து
காய்சினமா களிறன்னான் என்கைப்பற்றி
தீவலஞ்செய்யக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

இம்மைக்கும் ஏழேழ்பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாரயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான். 

வரிசிலைவாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம்பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என்கைவைத்து
பொரிமுகந்தட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

குங்கும மப்பிக் குளிர்சாந்த மட்டித்து
மங்கலவீதி வலஞ்செய்து மணநீர்
அங்கு அவனோடும் உடன்சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதைசொல்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே.

Saturday, October 11, 2014

ஸ்ரீ கோவிந்த நாமாவளி !



ஸ்ரீ கோவிந்த நாமாவளி
ஸ்ரீநிவாஸா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
பக்தவத்ஸல கோவிந்தா
பாகவதப்ரிய கோவிந்தா
நித்ய நிர்மல கோவிந்தா
நீல மேகச்யாமள கோவிந்தா
புராணபுருஷ கோவிந்தா
புண்டரீகாஷ கோவிந்தா
நந்தமுகுந்த கோவிந்தா
நவ நீத சோர கோவிந்தா
கோவிந்த ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
பாப விமோசன கோவிந்தா
துஷ்ட ஸம்ஹாரக கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரிபாலக கோவிந்தா
கஷ்ட நிர்த்தூத கோவிந்தா
பாலக போஷக கோவிந்தா
பாஹி மாம் ரக்ஷக கோவிந்தா
கோபிஜனலோல கோவிந்தா
கோவர்த்தனோத்தர கோவிந்தா
ஸீதாரக்ஷக கோவிந்தா
தசரத நந்தன கோவிந்தா
தசமுக மர்த்தன கோவிந்தா
பக்ஷி வாஹன கோவிந்தா

பாண்டவப்ரிய கோவிந்தா
மத்ஸ்ய கூர்ம கோவிந்தா
வரஹா நரஸிம்ஹ கோவிந்தா
வாமந பார்கவ கோவிந்தா
ராம க்ருஷ்ண கோவிந்தா
பௌத்த கல்கி கோவிந்தா
வேணுகோபால கோவிந்தா
வேங்கட விட்டல கோவிந்தா
தரித்ரஜனபரீக்ஷக கோவிந்தா
தர்ம ஸம்பாதித கோவிந்தா
அனாதரக்ஷக கோவிந்தா
ஆபத்பாந்தவ கோவிந்தா
சரணகதவத்ஸல கோவிந்தா
கருணா ஸமுத்திர கோவிந்தா
கமலதளாக்ஷ கோவிந்தா
காமிதபலதாயக கோவிந்தா
பாபா நாசக கோவிந்தா
சேஷசாயி கோவிந்தா
ஸ்ரீமுத்ராங்கித கோவிந்தா
மஹோத்ஸவதேவ கோவிந்தா
ஹரே ராம ஹரே ராம 
ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

கவிஸந்தரண உபநிஷத்

Saturday, September 21, 2013

ஸ்ரீ ராம ராம ராம


அவசரகதியில் செல்லும் நமது அன்றாட வாழ்வில் எளிதாக சொல்ல கூடிய மந்திரம் ஸ்ரீ ராம நாம மந்திரம்.
மிகுந்த பலனை அள்ளித் தரும் மந்திரமான இது, எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாதது.நேரம் இடம் போன்றவற்றை கடந்து மனத்தாலும் உதட்டாலும் சொல்ல இடர்களை களையும் மந்திரம் இது.
எளியது வலியது நினைக்க நினைக்க இனியது ஸ்ரீ ராம மந்திரம்.

இதன் சிறப்பை ஸ்ரீபார்வதி தேவியே ஸ்ரீ பரமேஷ்வரனிடம் சஹஸ்ர நாமத்தை எளிய வழியில் சொல்லும் உபாயத்தை கேட்க ,ஸ்ரீ பரமேஸ்வரன் ஸ்ரீராம நாமத்தை மூன்று முறை சொன்னாலே ஸ்ரீ சஹஸ்ர நாமத்தை சொன்னதற்கு ஈடானது என்றார்.
எனில்,இந்த நாமத்தின் மஹிமையை நாம் புரிந்து கொள்ளலலாம்.

ஸ்ரீ ராம ராம ராம