திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய
'திரு ஆவடுதுறை' பதிகத்தில் இடம்பெறும்
வரும் இரு தேவாரப் பாடல்களைத்
தொடர்ந்து பாராயணம்செய்து,
சிவபெருமானை மனதார வேண்டி
நின்றால் சத்ரு பயம் நாசமாகும்.
*வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்! தானவர் தலைவர் போலும்!
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை யார்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.
*விடைதரு கொடியர் போலும்! வெண் புரி நூலர் போலும்!
படைதரு மழுவர் போலும்! பாய்புலித் தோலர் போலும்!
உடைதரு கீளர் போலும்! உலகமும் ஆவார் போலும்!
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.
No comments:
Post a Comment