Friday, March 18, 2011

பௌர்ணமி பூஜை


உ 
பௌர்ணமி பூஜை

பௌர்ணமி அன்று ஸ்ரீ சந்திரனை நோக்கி கீழ் கண்டவாறு பூஜை செய்ய தீராத பல பிரச்சினைகள் தீரும் என்று தவத்திரு சஞ்சீவ ராஜா ஸ்வாமிகள் அருளினார்.
ராஜ் tv-யில் நேரடி ஒளிபரப்பில் இதனை வழங்கினார்.

பூஜை முறை
நட்சத்திர கோலம் இட்டுவாழை இலையில் மஞ்சள் குங்குமம் வாழைப்பழம் படையல் வெண்மை நிறத்தையொத்த நெய் வேத்யம் ( வெண்பொங்கல் தயிர் சாதம் சுண்டல் பச்சரிசி சாதம் ஏதாவது)
குத்து விளக்கு ஏற்றி வைக்கவும்.
மரக்கா படி இருந்தால் நெல் மணிகளை நிரப்பி (நெல் இல்லையெனில் அரிசி )அதன் மேல் இரண்டு மாவிளக்கு தீபம் ஸ்ரீ சந்திரனை நோக்கி ஏற்ற வேண்டும்.விளக்குக்கு நெய் விட்டு ஏற்றவும்.

பிறகு, கீழ்காணும் மந்திரத்தை 20 முறை உச்சரிக்கவும்.

ஒம் ஸோமச், ச யேம ரூப
சர்வபாப நிவாரண
பத்மச், ச மாதா சுபயோக கடாட்ச், ச
மதி பிரகாச அனுக்கிரக ததாஸ்து

பிறகு ஊதுவத்தி ஏற்றி காட்டிக் கொண்டே நெய்வேத்திய படையலை வலம் வந்து இரண்டு முறை மீண்டும் உச்சரிக்கவும்.
பிறகு ஆரத்தி காட்டவும்.

மரக்கா படி இல்லையெனில் வீட்டில் உள்ள சுத்தமான பாத்திரத்தை உபயோகிக்கலாம்.

இவர் கூறிய பல விஷயங்கள் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் ஒத்து போயுள்ளது.அதே சமயம் மிகவும் யதார்த்தமாக கூறி புரிய வைக்கும் இவரின் விளக்கங்கள் பாமரனுக்கும் விளங்கும்.அதோடு நின்று விடாமல் எவரையும் தெளிவு கொள்ள வைக்கும்.இவரின் நேரடி பேட்டி தற்போது வாரந்தோறும் ராஜ் டிவியில் சனிக்க்ழமை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இவரின் வலை முகவரி: sanjevi.கம