Monday, April 11, 2011

தீபம்; வாழ்வின் கலங்கரை விளக்கு







தீபம்:சில குறிப்புகள்

காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.
இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.தீபத்தை கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும். தெற்கு முகம் பார்த்து தீபம் ஏற்றுவதை தவிர்க்கவும்.
ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்.
நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலங்களை அடையலாம்.

புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் தொந்திரவுகள் அண்டாது.

பஞ்சு திரி =மங்களம் பெருகும்
வாழை தண்டு திரி =புத்திர பாக்கியம்
பட்டு நூல் திரி =எல்லாவித சுபங்களும்
ஆமண்க்கு எண்ணெய் தீபம் =அனத்து செல்வம்
தேங்காய் எண்ணெய் இல்ப்பெண்ணெய் தீபம் =தேக ஆரோக்கியம்,செல்வம்
நல்லெண்ணெய் தீபம் =எம பயம் அகலும்
தாமரை நூல் தீபம் = லக்ஷ்மி கடாக்ஷம்
நெய் தீபம் = சகல சௌபாக்யம்

வெண்கல விளக்கு = பாவம் அகலும்
அகல் விளக்கு = சக்தி பெருகும்
எவெர் சில்வர் தவிர்க்கவும்.

தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதகூடாது.

தீப சரஸ்வதி என்று மூன்று முறையும்
தீப லக்ஷ்மி என்று மூன்று முறையும்
தீப துர்கா என்று மூன்று முறையும்
குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என
தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண்டும்.

 தீபம் வெறும் விளக்கு அல்ல.நம்  வாழ்வின் கலங்கரை விளக்கு.
மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம்.   
தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.

Saturday, April 9, 2011

ஸ்ரீமத் ராமாயணம் : சக்தி மிகுந்த பரிகாரம்

 
ஸ்ரீ ரமஜெயம்
ஸ்ரீமத் ராமாயணம் : சக்தி மிகுந்த பரிகாரம் 
SRIMATH RAMAYANAM

ஸ்ரீமத் ராமாயணம் காலகாலமாக வாசிக்கப்பட்டு வரும் மாபெரும் நூலாகும். 
இதனை எளிய மக்களின் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் சங்கடங்கள் எதிர் கொள்ளவும் அதனை விலக்கிக   கொள்ளவும்,பெரியோர்கள் உமா ஸம்ஹிதை மூலத்தை கொண்டு  இக்காலத்திற்கு ஏற்ப ஸ்ரீமத் ராமாயணத்தில் வருகின்ற சில  அத்யாயங்களை  வகை படுத்தி நம் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள வகை செய்து உள்ளார்கள்.அதனை கண்டு நாம் பயனடைவோமாக ...
ஸ்ரீ ராம ராம ராம 

முக்கியமான த்யான சுலோகங்கள்
ஸ்ரீமத் ராமாயண் பாராயணம் செய்வதற்கு முன் கீழ் காணும் த்யான சுலோகங்களை படிக்கவும்.

ஸ்ரீ வால்மீகி
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் I
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II
வால்மீகேர் முநிஸிமஸ்ய கவிதா வந சாரிண: I
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராம்கதிம் II

ஸ்ரீ ஹநுமான்
கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம் I
ராமாயண மஹாமாலா ரத்நம் வந்தே(அ) நிலாத்மஜம் II
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் I
பாஷ்ப வாரி பரிபூர்ண லோசநம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் II

ஸ்ரீ ராமன்
வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸநே ஸூஸ்த்திதம் II
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜந ஸூதே தத்வம் முனிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபி : பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்



முக்கியமான மங்கள சுலோகங்கள்
ஸ்ரீமத் ராமயண பாராயணம் முடிந்த பிறகு,கீழ் காணும் சுலோகங்களை படிக்க வேண்டும்.

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய : பரிபாலயந்தாம்
ந்யாய்யேன மார்கேணமஹீம் மஹீசா : I
கோப்ராஹ்மணேப்ய : சுபமஸ்து நித்யம்
லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸூகினோ பவந்து II

காலே வர்ஷது பர்ஜந்ய : ப்ருதிவீ ஸஸ்யசாலிநீ I
தேசோயம் க்ஷோபரஹித : பராஹ்மணாஸ்ஸந்து நிர்ப்பயா : II
மங்களம் கோஸலேந்த்த்ராய மஹநீய குணாப்தயே I
சக்ரவர்த்தி த நூஜாய ஸார்வபௌமாய மங்களம் II
வேத வேதாந்த வேத்யாய மேக ச்யாமள மூர்த்தயே I
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ச்லோகாய மங்களம் II
விச்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீ பதே :
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம் I
பித்ரு பக்தாய ஸ்ததம் ப்ராத்ருபிஸ்ஸஹ ஸீதயா II
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம் II
த்யக்த ஸாகேத வாஸாய சித்ரகூட விஹாரிணே I
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம் II
ஸௌமித்ரிணா ச ஜானக்யா சாபபாணாஸி தாரிணே I
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம் I
தண்டகாரண்யவாஸாய கண்டிதாமர சத்ரவே I
க்ருத்ர ராஜாய பக்தாயா முக்திதாயாஸ்து மங்களாம் II
ஸாதரம் சபரீ தத்த பலமூலா பிலாஷிணே I
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் II
ஹநுமத் ஸமவேதாய ஹரீசாபீஷ்ட தாயிநே I
வாலி ப்ரமதநாயஸ்து மஹா தீராய மங்களாம் II
ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூல்லங்கித ஸிந்தவே இ

சித்த ராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம் II
ஆஸாத்ய நகரீம் திவ்யாம் அபிஷிக்தாய ஸீதயா  I
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம் II
மங்களாசாஸந பரை : மதாசார்ய புரோகமை : I
ஸர்வைச்ச பூர்வைராசார்யை : ஸத்க்ருதாயாஸ்து மங்களம் II



SRI RAMAYANAM SAVES OUR LIFE : SRI RAM SRI JAYARAM SRI JAYA JAYA ராம்

நமக்கு பொதுவாக உள்ள பிரசினைகள் அதனை தீர்க்கும் பரிகார அத்யாயங்கள் அட்டவணை


Å¡¢¨º
±ñ

ÌÈ¢ôÀ¢ð¼
¸¡¡¢Âí¸û

¸¡ñ¼õ

À¡Ã¡Â½
À̾¢¸û

À¡Ã¡Â½
¸ð¼õ

¸¡Äõ

¿¢§Å¾Éõ

1


«§Â¡ò¡

21,22,23,
24&25


¸¡¨Ä «øÄÐ
Á¡¨Ä

³óÐ Å¡¨Æô
ÀÆí¸û

2


«§Â¡ò¡

32


¸¡¨Ä
Á¾¢Âõ
Á¡¨Ä

³óÐ Å¡¨Æô ÀÆí¸û

3


À¡Ä

73

…£¾¡
¸øÂ¡½õ

¸¡¨Ä

ÀÍõ À¡ø

4

§Á¡‡ ÀÄý …¢ò¾¢ì¸..

¬ÃñÂ

65,66,
67&68

ƒ¼¡Ô
§Á¡‡õ

¸¡¨Ä

³óÐ Å¡¨Æô ÀÆí¸û

5

«ÀŠÁ¡Ãõ ,ŠÅ¡ºõ ,
¸¡ºõ ,̉¼õ ¾£Ã..

Ôò¾

59

áŽ
¸¢¡£¼Àí¸õ

þÃñÎ §Å¨Ç

ӾĢø §¾ý ÓÊÅ¢ø
À¡ø

6

§Àö,À¢º¡Í, À¢øÄ¢
ÝýÂõ ¿£í¸

Íó¾Ã

3

Äí¸¡
Å¢ƒÂõ

Á¡¨Ä

º÷츨Ãô ¦À¡í¸ø,†ÛÁ¨É
ò¡Éõ ¦ºöÐ ¸¨¼º¢Â¢ø ¸üâà ¬Ãò¾¢ ¸¡ð¼×õ

7

¨Àò¾¢Âõ ¦¾Ç¢Â..

Íó¾Ã

13

ÛÁò
º¢ó¨¾

¸¡¨Ä

¯Ùó¾ýÉõ

8

¾¡¢ò¾¢Ã ¿¢¨Ä ¿£í¸..

Íó¾Ã

15

º£¾¡
¾¡¢ºÉõ

¸¡¨Ä

³óÐ Å¡¨Æô ÀÆí¸û

9

«Îò¾ÎòÐ ÅÕõ
Ðì¸õ ¿£í¸..

Ôò¾

116

º£¨¾
¬ïƒ§ÉÂ
…õÅ¡¾õ

¸¡¨Ä

³óÐ Å¡¨Æô
ÀÆí¸û

10

±¾¢÷À¡Ã¡Áø Åó¾
¬ÀòÐ ´Æ¢Â..

Ôò¾

18 ,19

Å¢À£„½
ºÃ½¡¸¾¢

¸¡¨Ä

ӾĢÖõ ¸¨¼º¢Â¢Öõ §¾í¸¡ö

11

Å¢ðÎ À¢¡¢ó¾Å÷
ÅóÐ §ºÃ..

Íó¾Ã

36

«íÌģ¸ ôþ¡Éõ

¸¡¨Ä Á¡¨Ä

ÀÄ¡ôÀÆõ,Á¡õÀÆõ

12

Ð÷¦º¡ôÀÉ
§¾¡„õ ¿£í¸..

Íó¾Ã

27

¾¢¡¢ƒ¨¼
ŠÅôÉõ

¸¡¨Ä

ãýÚ ¿¡ð¸û À¡Ã¡Â½õ º÷츨à ¿¢§Å¾Éõ

13

Šò¡£ ¸¡ÁÉ
§¾¡„õ ¿£í¸

Íó¾Ã

7,8,9,
10,11

ÛÁò
º¢ó¨¾

¸¡¨Ä

þÕÀÐ «ôÀí¸û

14

áÁÛìÌî ¦ºö¾
«Àº¡Ã §¾¡„õ ¿£í¸..

Íó¾Ã

38

¸¡¸¡Íà ŢÕò¾¡ó¾õ

¸¡¨Ä

³óÐ Å¡¨Æô ÀÆí¸û

15

ÁÚÀ¢ÈŢ¢ø º¸Ä
͸í¸Ùõ ¦ÀÈ..

Ôò¾

131

‚ áÁ Àð¼¡À¢§„¸õ

¸¡¨Ä

´Õ Á¡¾õ À¡Ã¡Â½õ ¦ºö §ÅñÎõ. ¦Åñ
¦À¡í¸ø

16

ÌÆó¨¾ §ÀÚ
¯ñ¼¡¸

À¡Ä

15,16

Òò¾¢Ã
¸¡§Á‰Ê À¡Â… ¾¡Éõ

¸¡¨Ä

20 ¿¡ð¸û À¡Ã¡Â½õ ¦¿ö À¡Â…õ

17

͸ô À¢ÃºÅõ ¯ñ¼¡¸..

À¡Ä

18

‚áÁ¡Å¾¡Ãõ

¸¡¨Ä

¸÷ôÀ¢½¢ §¸ð¸ §ÅñÎõ.
²¾¡ÅÐ ŠÅøÀ ¿¢§Å¾Éõ

18

º¢¨È Å¡º ÀÂõ ¿£í¸..

Ôò¾

117

Å¢À£„½ý
º£¨¾¨Â
‚ áÁ¡¢¼õ §º÷ò¾ø

¸¡¨Ä

ÁÐà À¾¡÷ò¾í¸û

19

Ð÷ ¿¼ò¨¾ÔûÇ
À¢û¨Ç ¿øÄÅÉ¡¸..

«§Â¡ò¡

1,2

‚ áÁ ̽ Å÷½õ

¸¡¨Ä

³óÐ Å¡¨Æô
ÀÆí¸û

20

¿¢¨Éò¾ ¸¡¡¢Âõ
¿¢¨È§ÅÈ

À¡Ä

75,76

ÀÃÍáÁ
¸÷ÅÀí¸õ

¸¡¨Ä

À¡Â…õ, «ôÀõ

21*

სí¸ì ¸¡¡¢Âí¸Ç¢ø
¦ÅüÈ¢
¦ÀÈ..

«§Â¡ò¡

100

ჾ÷Áí¸û

¸¡¨Ä

³óÐ Å¡¨Æô
ÀÆí¸û

Friday, April 8, 2011

பூத்தவளே புவனம் !!

பூத்தவளே,புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே.பின் கரந்தவளே.கறைக்கண்டனுக்கு
மூத்தவளே.என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
 மாத்தவளே. உன்னையேன்றி மற்றோர்
தெய்வம் வந்திப்பதே !


தெய்வ புலவர் அபிராமி பட்டர்
இவரின் நூல்கள் கீழ் காணும் முகவரியில் கிடைக்கின்றன.

மதுரைத் திட்டம் 

Thursday, April 7, 2011

கந்த சஷ்டி கவசம்:

கந்த சஷ்டி கவசம்:



(தேவராய சுவாமிகள் அருளியது)

காப்பு
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

குறள் :
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
\குமரனடி நெஞ்சே குறி.


நூல்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்

கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!

வாசவன் முருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!

சரவண பவனார் சடுதியில் வருக
ரஹண பவச ர ர ர ர ர ர ர
ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விணபவ  சரஹண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க

விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்பரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா  சலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை

நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்
மெத்தமெத் தாக வேலா யுதனார்

சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்

சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்ரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேன பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!

திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!

மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.

 ***********************************************************************

ஆறிருந்  தடந்தோள் வாழ்க
ஆறு முகம் வாழ்க
வெற்பைக் கூறுசெய்
தனி வேல் வாழ்க
குக்குடம் வாழ்க
செவ்வேல் ஏறிய மஞ்ஞை  வாழ்க
ஆணை தன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியாரெல்லாம் !!

 
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%