Tuesday, August 23, 2016

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு













பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 

பலகோடி நூறாயிரம் 
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் 
சேவடி செவ்வி திருக்காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி 
ஆயிரம் பல்லாண்டு,
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற 
மங்கையும் பல்லாண்டு,
வடிவார் சோதி வலத்துறையும் 
சுடராழியும் பல்லாண்டு,
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே.   

No comments:

Post a Comment