Thursday, May 5, 2011

ஸ்ரீ ராமஜெயம்: sri raamajeyam

ஸ்ரீ ராமஜெயம்


"தீர்த்த யாத்திரை, பாப விமோசனம்:
கோபுர தரிசனம், கோடி புண்ணியம்" என்பார்கள். ஆண்டவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிலும் தனித்து நிற்பதும், சிறப்பு வாய்ந்ததும் மனிதப் பிறவி ஒன்று தான். மனிதர்களாகப் பிறவி எடுத்த நாம், நாம் எடுத்த பிறவி நன்மை அடைய பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று ஆண்டவனை தரிசித்து புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்கிறோம். இதற்கும் மேலாக நாம் இருந்த இடத்திலேயே நாம் நமக்கு வேண்டியதை மனதில் எண்ணி ஸ்ரீ ராமஜெயம் எனும் மந்திரத்தை தொடர்ந்து எழுதுவதினால் நாம் நினைத்த காரியம் உறுதியாக கைகூடும் என்பதில் சற்றும் ஐயமில்லை. மேலும் இதனால் ஏற்படும் பலங்களும், புண்ணியங்களூம் சொல்லிலும், கணக்கிலும் அடங்கா. எழுதும் பொழுது மௌனமாகவும், கவனத்துடன் மனதை ஒரு நிலைப்படுத்தி எழுதுவது மிக மிக அவசியமாகும். ராம நாமம் எங்கு ஒலித்தாலும் அங்கெல்லாம் நம் கண்களுக்குப் புலப்படாமல், தமது கண்களில் கண்ணீர் மல்கி ஆஞ்சனேயர் குடி கொண்டிருப்பாராம். ஆதலால் நாம் ஆஞ்சனேயரின் அன்புக்கும் பக்திக்கும் ஆளாகின்றோம். இதனால் நாம் சிற்றின்பத்திலிருந்து விலகி பக்தியை அடைகின்றோம். மனதில் தைரியத்தை அளித்து நம்மைக் காக்கின்றார் ஆஞ்சனேயர்.

(((((((((( ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் )))))))))) 

No comments:

Post a Comment